Tuesday, March 19, 2013

வெட்டிவேர்

வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்ததுவிலாவேர், இலமிச்சம் வேர் என்ற பெயர்களால் குறிப்பிடப்படும் இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல் வளரும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டிவேர் என வழங்கப்படுகிறது

வெட்டிவேர் 

சாகுபடி முறைகள்:
வெட்டிவேரின் செடிகளை வேருடன் வெட்டி, தோண்டி எடுத்து, ஒரு கொத்தாக உள்ள செடியைத் தனித்தனியே பிரித்தெடுக்க வேண்டும். பின் வேர்ப்பகுதியிலிருந்து 15-20 செ.மீ. மேலே உள்ள இலைகளை வெட்டிவிட வேண்டும். வேர்ப்பகுதியிலிருந்து 10 செ.மீ. கீழே உள்ள வேர்களை வெட்டி, நடுவதற்கு உள்ள நாற்றுக்களைத் தயாரிக்க வேண்டும். இதனை 15 செ.மீ. இடைவெளியில் நடுதல் அவசியமாகும்.கரும்பு நடுவதுபோல் நடவேண்டும்வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது..

இதற்கு அதிக ஆள் தேவையில்லை. அதிக தண்ணீர் தேவையில்லை. அதிக வெயில் தேவையில்லை. அப்படியே அதிக தண்ணீர், அதிக வெயில் இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை.
வெட்டிவேர் நாற்று 

 அறுவடை  காலம் 
12 மாதங்களில் இருந்து 14 மாதங்களுக்குள் அறுவடை செய்துகொள்ளலாம்.
ஒரு ஏக்கருக்கு 12,000 முதல் 15,000 வரை நாற்றுகள் தேவைப்படும். ஒரு நாற்று 60 பைசாவிற்கு வாங்கி பயிரிட வேண்டியதுதான். முதல்முறை மட்டும்தான் இந்த செலவு. அடுத்தமுறை நம் நிலத்தில் இருந்தே நாற்றுகள் எடுத்துக்கொள்ளலாம். மிகுதியாக உள்ளதை தேவையானவர்களுக்கு விற்றுவிடலாம்.

 கரும்பு நடுவதுபோல் நடவேண்டும். பார்ப்பதற்கு உலர்ந்தாற்போல் இருந்தாலும் நாற்று நட்ட பதினைந்திலிருந்து இருபத்தி ஐந்து நாட்களுக்குள் பச்சை பிடித்துவிடும். மூன்று மாதங்கள் கழித்து கால் மாற்றிவிட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்துகளை எடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்குப்பிறகு 13ம் மாதத்தில் அறுவடைதான்

வேர் பகுதி 



உரம் மேலாண்மை  
ரசாயன உரம் தேவையில்லை. பூச்சிமருந்து தேவையில்லை. வெட்டிவேர் செடியே பூச்சிகொல்லியாக செயல்படுகிறது. பெரிய காய்கறித்தோட்டம் வைத்திருப்பவர்கள் ஊடுபயிராகவோ வரப்புகளிலோ நெருக்கமாக நட்டுவிட்டால் அதுவே பூச்சிவிரட்டியாகவும் செயல்படும்.

பிற பயன்கள்
1.மேலும் பூச்சிகள், எலிகள், பாம்புகள் ஆகியவற்றை இதன் இலைகளும் வேர்களும் விரட்டிவிடுகின்றன. இதன் வேரில் உள்ள எண்ணெய்த்தன்மை எலிகளை அண்டவிடாது.நெல்வயல்களில் வெட்டிவேரை நடலாம். இதனால் வயலில் அமைக்கப் பட்ட கரைகள் உறுதிப்படும்.

2.ஏலத் தோட்டப் பகுதிகளில் வெட்டிவேரைப் பயன்படுத்தினால், நிலச்சரிவு ஏற்படாது. இடுகரை விழாது. வெட்டிவேர் நட்டதும், அந்தப்பூமி உறுதிப்பட்டுவிடும். கல்சுவர்களின் ஊடே இது செழிப்பாக வளர்ந்துசெல்லும்.
மண் அரிப்பை தடுக்க 

3. இது பயிரையோ, அதன் விளைச்சலையோ எவ்விதத்திலும் பாதிக் காது.

4.ஒவ்வொரு ஆண்டும் வெட்டிவேரைத் தரைமட்ட அளவிற்கு வெட்டிவிட்டு, உரிய பயிருக்கு வெட்டிவேர் கூடுதல் நிழல் தராமல் தடுக்கலாம்.

5.இதன் உறுதியான சிம்பு வேர்கள் பூமிக்குள் 3 மீட்டர் ஆழம் வரை அடர்ந்து படர்ந்து, மண் சரிவு, உடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

6.மற்ற விவசாயப் பயிர்களின் இயல்பான வளர்ச்சியில் இது போட்டியிடுவதில்லை. அவற்றின் வளர்ச்சியில் பெரிதும் துணைபுரிகின்றது.

7.இத்தகயை வெட்டிவேர் எல்லா வகையான மண்ணிலும் பல வகையான கால நிலையிலும் வளமுடன் வளரும். இதனைச் சுற்றியுள்ள மற்ற பயிர்கள் ஒரு வேளை அழிய நேர்ந்தாலும் வெட்டிவேர் அழிவதில்லை. அடுத்துவரும் மழையிலிருந்து மண்ணைக் காக்க, மண்ணிற்குள் மறைந்திருக்கும்.
 
 விற்பனை முறைகள் 
இது ஒரு லாபகரமானபயிர். வெட்டிவேர் புல்லானது நல்ல மருத்துவகுணம் உள்ளதால் இதற்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது. எத்தகைய மண்ணாக இருந்தாலும் பாதகமில்லை. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு டன் வேர் நிச்சயம். மணல்பாங்கான நிலமாக இருந்தால் வேர் நன்கு இறங்கி விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் தரும். இரண்டு டன்னுக்கு மேலும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். ஒரு டன் 50000 என்ற அளவில் விற்பனையாகிறது 

மேலும்  தொடர்புக்கு 
தொடர்புக்கு: எம்.அகமதுகபீர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர் (அஞ்சல்), தாராபுரம்-638 657.
-
எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர், அக்ரி கிளினிக், 93607 48542. 

வெட்டிவேர் நாற்றுகள் விலைக்கு உள்ளன. வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
வீ.ராஜகோபாலன், ஸ்ரீதேவி மெடிக்கல்ஸ், திருவளப்பாடி, அத்தாணி, அறந்தாங்கி வட்டம், புதுக்கோட்டை-614 630. 04371-244 408.

வெட்டிவேர்: புல்-நாற்று, வளர்ப்பு முறை மற்றும் ஆலோசனைகளுக்கு:
சி.பாண்டியன், சி.எம்.விவசாயப்பண்ணை, குருவாடிப்பட்டி, சுண்டைக்காடு (அஞ்சல்), திருப்பத்தூர் தாலுகா, சிவகங்கை. 93629 49176.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர்புக்கு வின்சென்ட்.9894066303.http://www.maravalam.blogspot.in


நன்றி :
1.தினமலர் 
2.திரு .வின்சென்ட்  அவர்கள்.
3.youtube 

2 comments:

  1. வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே
    என்னை விவசாயம் சார்ந்த பதிவுகளை எழுத தூண்டிய ஒன்று என்னவென்றால் அது இந்த வெட்டிவேர் தான்.எனவே எனது முதல் பதிவாகா
    அளிப்பதில் பெருமையடைகிறேன்.

    ReplyDelete